பொதுவாக வீட்டில் பொழிவு மற்றும் அழகிற்காக சில பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பார்கள்.

அதில் ஒன்று தான் புத்தர் சிலை.  இலங்கை, சீனா மற்றும் மலேசியாவில் இருக்கும் பௌத்த மக்கள் புத்தரை கடவுளாக வழிப்பட்டு வருகிறார். அமைதியின் உருவமாக புத்தர் பார்க்கப்படுகிறார்.

அந்த வகையில், சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைப்பதால் வீட்டிற்பு அமைதியும், செழிப்பு கிடைக்கும் என சொல்லப்படுகின்றது. அத்துடன் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்வதாகவும் சொல்லப்படுகின்றது.

இது போன்ற பலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் புத்தர் சிலை கண்ட இடங்களில் வைக்காமல் குறிப்பிட்ட திசை மற்றும் இடத்தில் வைக்க வேண்டும். அப்படியாயின் புத்தர் சிலையை வைக்க சிறந்த இடம், திசை எது? அதனை எந்த நிறத்தில் வாங்க வேண்டும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

சாஸ்த்திரம்- இந்த நிறத்தில் புத்தர் சிலை வீட்டில் வைத்தால் அசுபமாம்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Where To Place Laughing Buddha At Your Home

சிலர் வீட்டுகளில் சிரிக்கும் புத்தர் சிலை அல்லது குபேரன் சிலை வாங்கி வைப்பார்கள். இது வீட்டில் இருக்கும் செல்வத்தை அதிகரிக்கும் என கருதப்படுகின்றது.

சிரிக்கும் புத்தரை சீன ஃபெங் சுய்யில் மக்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது மகிழ்ச்சி, செழிப்பு என்பவற்றை கொடுக்கின்றது. ஆனால் குபேரன் இதனுடன் தொடர்பானவர் அல்ல என சாஸ்த்திரம் கூறுகின்றது.

சாஸ்த்திரம்- இந்த நிறத்தில் புத்தர் சிலை வீட்டில் வைத்தால் அசுபமாம்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Where To Place Laughing Buddha At Your Home

அதிர்ஷ்டத்தையும் சாத்தியமான நிதி ஆதாயங்களையும் தன்வசப்படுவதற்கு புத்தர் சிலையை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கு திசை புதையல் அளிக்கும் திசையாக கருதப்படுகிறது, எனவே சிலையை அங்கு வைப்பது குடும்ப நல்லிணக்கத்தை மேம்படுத்தும்.

மோதல்களைக் குறைக்கும் சிரிக்கும் புத்தர் சிலை, எதிர்மறையான எண்ணங்களை அகற்றுவதாகவும் கூறப்படுகின்றது. சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் மண்டபம், படுக்கையறை அல்லது உணவு அறைகளில் வைக்கலாம்.       

சாஸ்த்திரம்- இந்த நிறத்தில் புத்தர் சிலை வீட்டில் வைத்தால் அசுபமாம்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Where To Place Laughing Buddha At Your Homeபுத்தர் சிலைகளை வீட்டில் வைக்க விரும்புவோர் கண்டிப்பாக வெள்ளை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறங்களில் தான் வைக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் புத்தர் சிலையால் வரும் பலன்கள் சரியாக வந்து சேராமல் இருக்கும்.

சாஸ்த்திரப்படி, மங்களகரமாக கருதப்படும் புத்தர் சிலையை வெறுமையாக வைக்காமல் அதன் பக்கத்தில் ஏதாவதொரு பித்தளை, அல்லது பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில், சில பூக்களையும் போட்டு வைக்கலாம். வீட்டிற்கு புது பொலிவு மற்றும் நிரந்தரமான மன அமைதியை கொடுக்கும்.     

சாஸ்த்திரம்- இந்த நிறத்தில் புத்தர் சிலை வீட்டில் வைத்தால் அசுபமாம்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Where To Place Laughing Buddha At Your Home