பொதுவாகவே  எல்லா காலங்களிலும் கிடைக்ககூடிய காளான் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றீடாக இருக்கின்றது. 

தினசரி உணவில் காளான் சேர்த்துக்கொண்டால், உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளைின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. 

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா... எப்படி செய்வது? | Mushroom Pepper Masala Recipe In Tamil

அதுமட்டுமன்றி பற்கள், நகங்கள், மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை போக்குவதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது. 

கோதுமையுமன் ஒப்பிடுகையில் காளான்களில் 12 மடங்கு அதிகமாக ஆண்டி-ஆக்சிடெண்டுகள் இருப்பதால், இது இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது.

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா... எப்படி செய்வது? | Mushroom Pepper Masala Recipe In Tamil

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.இதனால் அது மாரடைப்பை தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. 

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட களானை கொண்டு அசத்தல் சுவையில் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் காளான் மிளகு மசாலா எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா... எப்படி செய்வது? | Mushroom Pepper Masala Recipe In Tamil

தேவையான பொருட்கள்

வறுத்து அரைப்பதற்கு 

 பட்டை - 1 

ஏலக்காய் - 2

கிராம்பு - 4 

மிளகு - 1 1/2 மேசைக்கரண்டி 

சோம்பு - 1 தே.கரண்டி 

சீரகம் - 1 தே.கரண்டி

வரமிளகாய் -3

தாளிப்பதற்கு தேவையானவை

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா... எப்படி செய்வது? | Mushroom Pepper Masala Recipe In Tamil

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

சோம்பு - 1 தே.கரண்டி 

கறிவேப்பிலை - 1 கொத்து 

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

காளான் - 400 கிராம் (பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்) 

தண்ணீர் - 1/2 டம்

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா... எப்படி செய்வது? | Mushroom Pepper Masala Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூமானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சோம்பு, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி, ஆறவிட வேண்டும். 

பின்னர் வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.