நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட மூவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 18 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 88 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 186 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.