மார்ச் மாதத்தின் இறுதியில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியால் ஐந்து ராசிகளுககு ஜாக்பட் அடிக்கப்போகின்றது. நீதியின் கடவுளான சனிபகவான் நாம் செய்யும் புண்ணி பாவங்களுக்கு பலனை தந்தால் இரட்டிப்பாக தரக்கூடியவர்.

இவர் ஒரு ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு செல்ல சுமார் 2\12 ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். அந்த வகையில் இவரின் 2025 பெயர்ச்சி இந்த மார்ச் மாதம் ஆரம்பமாகும்.

மார்ச் 29 அன்று இரவு 10:07 மணிக்கு மீன ராசியில் நுழைகிறார். சனியின் ராசியில் ஏற்படும் இந்த மாற்றத்தால் சில ராசிகள் நற்பலனை அனுபவிக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் | Saturn Transit 2025 In Pisce Zodiac Sign New Life

 ரிஷபம்
  • சனி பகவான் உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் சஞ்சரிப்பார்.
  • இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.
  • மூத்த அதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் மேம்படும்.
  • வாழ்க்கையின் பல துறைகளில் வெற்றியைக் கொண்டுவரும்.
  • உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
  • உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும்.
  • நீங்கள் தொழிலிலும் பெரும் வெற்றியைப் பெறலாம்.  
மிதுனம்
  • மிதுன ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் உங்கள் பத்தாவது வீட்டில் சஞ்சரிப்பார்.
  • இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மை நிறைய கொடுக்கும்.
  • இது தொழில்முறை துறையில் சிறந்து விளங்க வாய்ப்புகளை வழங்கும்.
  • உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  
கன்னி
  • கன்னி ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் உங்கள் ஏழாவது வீட்டில் சஞ்சரிப்பார்.
  • காதல் திருமணத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.
  • வங்கியில் கடன் பெறுவதில் நீங்கள் வெற்றி பெறலாம்.
  • இந்த நேரத்தில் வணிக கூட்டாளர்களுடன் உறவு மேன்படும்.
  • நீண்ட காலம் செய்த முதலீடு நன்மை தரும். 
துலாம்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பார்.
  • இது மகிழ்ச்சியை அள்ளி தரும்.
  • உங்கள் தொழில்முறை துறையில் உங்கள் செல்வாக்கை அதிகரிக்கவும் உதவும்.
  • வேலையில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள்.
  • இலக்கை அடையபல வாய்ப்புக்கள் தேடி வரும். 
கும்பம்
  • கும்ப ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் உங்கள் இரண்டாவது வீட்டில் சஞ்சரிப்பார்.
  • எல்லா செல்வங்களும் உங்கள் மீது குவியும்.
  • உங்கள் சேமிப்பை அதிகரிப்பீர்கள்.
  • நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பல வெற்றியை பெறுவீர்கள்.
  • சொத்து பரிவர்த்தனைகளால் பயனடையலாம்.