பஞ்சாப் மாநிலத்தின் பதிந்தா மாவட்டம் ஹமிர்கார் கிராமத்தை சேர்ந்தவர் பீந்த் சிங் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 7 வயதில் மகனும், 3 வயதில் மகளும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். பீந்த்சிங், மோட்டார் ரிக்ஷாவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்குமுன்பு புற்றுநோய் காரணமாக பீந்த்சிங்கின் மனைவி திடீரென உயிரிழந்தார். மனைவி இறந்ததால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் அவர் சிரமப்பட்டார். இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்த பீந்த் சிங் 3 குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தார். பின்னர் அவர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 3 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 3 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை
- Master Admin
- 09 October 2020
- (507)

தொடர்புடைய செய்திகள்
- 30 October 2020
- (567)
கொரோனா வைரஸ் ; ஒரேநாளில் 49 ஆயிரத்திற்கு...
- 19 November 2020
- (467)
பேய் விரட்டுவதாக கூறி சிறுமிகள் பலாத்கார...
- 18 December 2020
- (734)
கடன் தொல்லையால் மகன்-மகளை தூக்கிலிட்டு க...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 26 June 2025
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.