எண்கணித சாஸ்திரத்திரமானது தொன்று தொட்டு புழக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திரமுறையாகும்.

அதன் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளிதில் வசியம் செய்துவிடுவார்களாம்! | People Born On These Dates Manipulating Other

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் தொடர்புபட்டிருப்பதாக எண்கணித சாஸ்திரம் குறிப்பிடப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள், ​​மற்றவர்களை கட்டுப்படுத்தும் அல்லது கையாளும் சக்திவாய்ந்த திறனை பிறப்பிலேயே கொண்டிருப்பார்கள். அப்படிப்பட திகதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3, 12, 21 மற்றும் 30 திகதிகள்

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளிதில் வசியம் செய்துவிடுவார்களாம்! | People Born On These Dates Manipulating Other

எந்த மாதத்திலும் இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கவர்ச்சிகரமான சேச்சாற்றலையும் மற்றவர்களை எளிதில்  ஈர்க்கும் அளவுக்கு அழகிய தோற்றத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வார்த்தைகள் மற்றும் தனித்துவமான செயல்களால், மற்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் வித்தியாசமான ஆளுமை மற்றவர்களுக்கு இவர்களின் மீதான விருப்பத்தை அதிகரிக்கும்.

6, 15 மற்றும் 24 திகதிகள்

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளிதில் வசியம் செய்துவிடுவார்களாம்! | People Born On These Dates Manipulating Other

12 மாதங்களில் எந்த மாதத்திலும் இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்

மற்றவர்களின் உணர்வுகளை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களின் இந்த ஆளுமை காரணமாக மற்றவர்களை இவர்கள் எளிதில் கவர்ந்துவிடுவார்கள். இவர்களின் அன்பான பேச்சிக்கு மற்றவர்கள் அடிமையாகவே மாறிவிடுவார்கள்.

9, 18 மற்றும் 27 திகதிகள் 

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளிதில் வசியம் செய்துவிடுவார்களாம்! | People Born On These Dates Manipulating Other

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறும் அளவுக்கு பொறுப்புணர்ச்சியும் அன்பான குணமும் இருக்கும்.

நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களின் குணத்தால் அவர்கள் யாரையும் எளிதாக வசீகரித்துவிடுகின்றார்கள்.