தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் தூக்கத்திற்கு முக்கியமாக பலரும் பயன்படுத்துவது தலையணை ஆகும். தலையணை இல்லாமல் படுத்தால் பலருக்கு தூக்கம் பாதிக்கும் நிலை கூட இருக்கின்றது.
ஏனெனில் தலையணையை வைத்து தூங்குவதில் தான் அவர்களுக்கு நிம்மதி அடைகின்றனர். ஆனால் தலையணை இல்லாமல் தூங்குவது சில நன்மைகளை தருவதாக கருதப்படுகின்றது.
தலையணை இல்லாமல் தூங்கினால், முதுகெலும்பின் சீரான இயக்கம் மேம்படுவதுடன் உடல் தோரணையு் பாதுகாக்கப்படுகின்றது.
மிகவும் கடினமான தலையணையை பயன்படுத்தும் போது கழுத்து மேல் நோக்கி சாய்ந்துவிடுவதுடன், இயற்கையான தோரணை குறைகின்றது.
அதேபோல், தலையணை இல்லாமல் தூங்குவது, முதுகெலும்புக்கு அழுத்தம் செய்யாமல் பராமரிக்க உதவும்.
எனினும், தலையணை இல்லாமல் தூங்கும் போது சில தீமைகளும் ஏற்படலாம். பக்கவாட்டில் படுத்து தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், தலை மற்றும் முதுகெலும்புக்கு ஆதரவு இல்லாமல் தூங்கினால், கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி ஏற்படலாம்.
தலையணை இல்லாமல் தூங்குவது சிலருக்கு சிரமம் ஏற்படுத்தினால், சரியான தலையணை பயன்படுத்துவது அவசியமாகும். முதுகு, கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தலையணை மற்றும் அதன் பராமரிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது சிறந்தது.