பொதுவாக இரவு தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கம். இந்த கனவுகள் நம்முடைய உள்ளுணர்வை பிரதிபலிக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.
அதிலும் குறிப்பாக சிலர் மனதில் நினைக்கும் விடயங்கள் அனைத்தும் இரவு கனவில் அப்படி ஒரு திரைப்படம் போன்று ஓடிக் கொண்டிருக்கும்.
இன்னும் சிலருக்கு நடக்கவிருக்கும் ஆபத்துக்கள் கனவில் வந்து உணர்த்தும். இது அவர்களின் முன்னோர்களின் செயல் என சாஸ்த்திரம் கூறுகிறது.
அப்படி இரவு தூங்கும் பொழுது கனவில் உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ திருமணம் நடப்பது போன்று கனவு வந்திருக்கும். அதனை அலட்சியமாக விட்டுவிடாமல் அது பற்றிய பலன்களை தேடிப் பார்க்கும் பொழுது பலன்கள் தெரியவரும்.
அந்த வகையில், திருமணம் நடப்பது போல கனவு கண்டால் அதற்கு அர்த்தம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி, திருமணம் செய்வது போன்று கனவுகள் வந்தால் உங்கள் வாழ்க்கையில் புதிய தொடர்புகள் மற்றும் முன்னேற்றங்கள் வரபோகின்றன என அர்த்தம். இது உண்மையான திருமணத்தை மட்டுமல்லாது தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியையும் குறிக்கும்.
உங்களுடைய கனவில் மகிழ்ச்சியான திருமணக் காட்சிகள் அக்கடி வந்தால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதேபோன்று தெளிவான மற்றும் அமைதியான திருமண காட்சிகள் வந்தால் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை குறிக்கும்.
சிலருக்கு திருமண சடங்குகள் கனவில் வரும். அப்படி வந்தால் நல்ல காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகிறது என அர்த்தம்.
உங்களுடைய கனவில் திருமணம் கலகலப்பாக இல்லாமல், சண்டைகள் அல்லது குழப்பங்களுடன் இருந்தால் உறவுகளில் பிரச்சினைகள் வரக் கூடும். அதே போன்று திடீரென திருமணம் நின்று போவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் நீங்கள் முடிவு செய்து வைத்திருந்த திட்டங்கள் தடைப்படும் என அர்த்தம்.
அத்துடன் கருப்பு நிற ஆடையில், திருமணம் நடப்பது போன்று கனவு வந்தால் வீட்டில் துக்க காரியங்கள் நடக்கும் என்றும் ஏதாவது இழப்பு வரப்போகிறது என்றும் அர்த்தமாகும்.
ஜோதிடத்தில், சுக்கிரன் (வீனஸ்) காதல் மற்றும் திருமணக் காரியங்களுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கனவில் திருமணம் செய்வது போன்று தோன்றினால் அது சுக்கிரனின் தாக்கம் இருக்கும்.
அதே வேளை, உங்களுடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், கனவு நல்ல நம்பிக்கையைத் தரும். இதுவே சுக்கிரன் பலவீனமாக இருந்தால், உறவுகளில் கவனம் தேவை.
பரிகாரம்
- நல்ல கனவு வர வேண்டும் என்றால் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- கெட்ட கனவு வந்தால், ஜோதிடரை அணுகி விரதம் அல்லது பூஜை செய்வது அவசியம்.
- உங்களுடைய கிரக நிலைகளை சரிபார்த்து, ஜோதிட ஆலோசனை பெறலாம்.