ஜோதிட சாஸ்த்திரம்படி, குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்கின்றன.
இதனால் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல காரியங்கள் அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது.
அதுவும் குறிப்பாக 30- 40 வயதாகியும் சிலருக்கு திருமணம் செய்வதற்கு வரன் வராமல் இருக்கும். இப்படியானவர்கள் இதுவரையில் திருமணமாகவில்லை என கவலைப்பட அவசியமில்லை. ஏனெனின் இந்த கிரக மாற்றங்களினால் அவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது
அந்த வகையில், கெட்டிமௌ சத்தம் கேட்க போகும் ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் மூன்றாம் வீட்டில் இருப்பதாலும், குரு ஏழாம் வீட்டைப் பார்ப்பதாலும் இவர்களுக்கு நடக்க வாய்ப்பு உள்ளது. சிறிது முயற்சி செய்தால், அவர்களுக்கு சாதகமான உறவு அமைய வாய்ப்பு உள்ளது. மணமகள் குடும்பம் பணக்காரர்களாக கூட அமையலாம். திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக ஆரம்பமாகும்.
ரிஷபம்
ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குரு மற்றும் சுக்கிரனின் சுப சேர்க்கையால் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு இருந்தால் அது அவர்களின் நல்ல நேரம் என்பார்கள். குறைந்த முயற்சியில் கூட திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மத்தியில் அல்லது உறவினர்கள் மூலம் திருமணத்திற்கு முயற்சிப்பது சிறந்தது. நீங்கள் விரும்பும் நபரை கூட மணக்கும் வாய்ப்பு உள்ளது என ஜோதிடம் கூறுகிறது.
சிம்மம்
சிம்மம் ராசியின் சுப ஸ்தானத்தில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் இந்த வருடம் திருமணம் நடக்கலாம். பணக்காரர்களாக இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் திருமணம் விரைவில் நடக்கும். திருமண முயற்சிகளுக்கு நேரம் மிகவும் சாதகமாக உள்ளதால் கிரகங்களின் சஞ்சாரத்தை கவனிக்கலாம். உறவினர்களுக்கும் திருமணம் நடக்கலாம். உள்நாட்டு உறவுகளுக்கு முயற்சிப்பது நல்லது.