சனியும், செவ்வாயும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரே சந்திக்கும் பொழுது உருவாகும் அரிய ‘பிரதியுதி யோகம்’ உருவாக உள்ளது. இதனால் 3 ராசிகள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்ல போகிறார்கள்.

சனி - செவ்வாய் உருவாக்கும் பிரதியுதி யோகம்

ஜோதிடப்படி பல கிரகங்கள் பல யோகங்களை உருவாக்கும். இதன் மூலம் சில ராசிகளுக்கு நல்ல யோகங்கள் உருவாகும். இந்த நிலையில் நாம் எல்லோருக்கும் சனி செவ்வாய் கிரகங்கள் பற்றி தெரியும்.

இந்த நிலையில் ஒருவருக்கொருவர் நேர் எதிரே வரும்பொழுது உருவாகும் அரிய அமைப்புக்கு ‘பிரதியுதி யோகம்’ என்று பெயர். இது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

நேருக்கு நேர் சனி- செவ்வாய்: 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் அரிய யோகம் | 3 Zodiac Lucky Rasi Palan In Tamil Pratiyuti Yoga

ஆகஸ்ட் 2025ல் சனிபகவான் மீன ராசியிலும், செவ்வாய் கன்னி ராசியிலும் நேருக்கு நேர் இருப்பதால் இந்த யோகம் உருவாகிறது. இதன் மூலம் 3 ராசிகளின் வாழ்க்கை முன்னேற போகின்றது.       

மேஷ ராசி
  1. மேஷ ராசிக்காரர்களுக்கு பிரதியுதி யோகம் சிறப்பான பலன்களை கொடுக்க உள்ளது.
  2. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
  3. பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம்.
  4. தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகளின் இருந்தால் லாபம் கிடைக்கும்.
  5. நிதியில் திடீரென முன்னேறுவீர்கள். 
  6. கொஞ்சமாக முயற்ச்சித்து கடனை முற்றாக அடைப்பீர்கள். 
  7. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
  8. உறவுகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  9. வெற்றிக்கான பயணம் இனிமேல் தொடரும். 
சிம்ம ராசி
  1. சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரதியுதி யோகம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளது.
  2. உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
  3. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 
  4. புதிய சொத்துக்கள், நிலங்கள் வாங்கும் யோகமும், புதிய தொழில்கள் தொடங்கும் வாய்ப்புகளும் உருவாகும்.
  5. ஏதாவது ஆசைப்பட்ட வேலைகள் பணம் காரணமாக முடிக்காமல் இருந்தால் முடியும். 
  6. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  7. தைரியமான முடிவுகளை எடுத்து அதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
  8. குடும்பத்தில் பிரச்சனைகள் இல்லாது போகும். 
தனுசு ராசி
  1. தனுசு ராசிக்காரர்களை பிரதியுதி யோகம் வாழ்க்கையில் உச்ச நிலைக்கு கொண்டு செல்லவுள்ளது.
  2. தொழில் ரீதியாக பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும்.
  3. கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
  4. உங்கள் திறமைகள் அனைவருக்கும் தெரியவரும்.
  5. எதிர்பாராத பண வரவுகள் வந்தே தீரும்.
  6. புதிய முதலீடுகளை செய்து நல்ல லாபம் பெறலாம்.
  7. நிதி நிலைமை சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  8. வேலை காரணமாக வெளி ஊர் செல்ல நேர்ந்தால் வெற்றியில் முடியும். 
  9. இவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள், தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள்,  வாய்ப்புகள் கிடைக்கும்.
  10. கடன் பிரச்சனையை முடிப்பார்கள்.