அமெரிக்க வனப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் அப்பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட இரு காட்டுத் தீ காரணமாக நேற்று மட்டும் இரண்டு தீயணைப்பு வீரர்களைக் கடுமையாக காயமடைந்துள்ளதுடன் 90,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் கவுண்டியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மின் சாதனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்தட்ட 19,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் சாண்டா அனா பாலை வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ அருகில் உள்ள ஓரேஞ்ச் கவுண்டிக்கும் பரவியது.
இந்த காட்டு தீ நேற்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகலில் மேலும் 12,000 ஏக்கருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 14 ஹெலிகொப்டர்களுடன் 750 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்ற போதும் தற்போதுவரை 5% மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.