ஜோதிடத்தின்படி பேராசை அதிகமான பெண்கள் பிறந்த ராசிகள் என்னவென்பது கூறப்பட்டு்ளளது.
இந்த உலகத்தில் பிற்நத அனைவரும் ஆசைப்பட தான் செய்வார்கள். ஆசை ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும். ஆனால் இது ஒரு படி மேலே போய் பேராசையாக மாறும் போது அது நம் வாழ்க்கையையே அழிக்க நேரிடும்.
அந்த குணம் எல்லோருக்கும் இருக்காது. ஒரு சிலர் கிடைத்ததை வைத்து வாழ்க்கையை சிறப்பாக வாழ்வார்கள். ஒரு சிலர் தங்களுடைய தேவைக்கு அதிகமாக சம்பாதித்து சொத்து வைத்து வாழ்வார்கள்.
ஆனால் இதை எல்லாம் தாண்டி யாரிடமும் இல்லாதது என்னிடம் வேண்டும் என அகங்காரத்துடன் ஆசைப்படுவது தான் பேராசையாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் ஜோதிடத்தில் பேராசை கொண்ட பெண் ராசிகள் யார் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.

மேஷம்
- மேஷ ராசி பெண்கள் சுறுசுறுப்பானவர்கள். இவர்களுக்குள் லட்சியமும் அதறகான முயற்சியும் இருக்கும். வாழ்க்கையில் எவ்வளவு சவால் வந்தாலும் அதை எதிர்த்து நின்று வெற்றி பெறுவார்கள்.
- இவர்கள் எல்லா விடயத்திலும் தனக்கு வெற்றி வேண்டும் நினைா்ாதால் அது அவர்களின் பேராசையாக மாறுகிறது. எல்லா விடயத்திலும் தன்னுடைய ஆதிக்கம் வேண்டும் என்று நினைப்பார்கள். இது தான் இவர்களுடைய பேராசை.
ரிஷப ராசி
- ரிஷப ராசி பெண்கள் ஆடம்பர வசதிக்காக பெயர் பெற்றவர்கள். சமூகத்தில் தாங்கள் ஆடம்பரமாக வாழ உது வேண்டும் என்றாலும் செய்வார்கள்.
- கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள் பெரும்பாலும் சிறந்த உணவு, ஆடம்பரமான விடுமுறைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மீது தீவிர விருப்பம் கொண்டவர்கள்.
- இவர்களின் பேராசை என்னவென்றால் இவர்களுக்கு ஆடம்பரமும் செல்வமும் எப்போதும் வேண்டும் என்பது தான். இது தான் அவர்களுடைய பேராசை.
மகரம்
- சனிபகவானால் ஆளப்படும் மகர ராசி பெண்கள் பேராசை நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் நிதித்தேவைக்கு இவர்கள் முக்கியதுவம் கொடுப்பார்கள்.
- இவர்களின் பேராசை என்னவென்றால் சமூகத்தில் அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் பேராசை. இவாகள் எல்லை கடந்து செயற்படவும் நேரிடும்.
சிம்மம்
- சூரியனால் ஆளப்படும் உக்கிரமான மற்றும் கவர்ச்சிகரமான ராசியான சிம்ம ராசிக்காரர்கள், பேராசை கொண்ட ராசிகளின் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார்கள்.
- சிம்ம ராசி பெண்கள் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அறியப்படுகிறார்கள், மேலும் அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் வெற்றியை ஆடம்பரத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள்.
- மற்றவர்களால் போற்றப்பட வேண்டும் மற்றும் மதிக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் தேவையால் அவர்களின் பொருள் உடைமைகளுக்கான ஆசை தூண்டப்படுகிறது.
