பண செல்வத்தை அதிகரிக்கவும் குறையாமலும் வைத்திருக்க செல்வத்தின் அதிபதியான லட்சுமி-குபேர கடவுளை வணங்கினால் நல்லது. மேலும் செல்வ செழிப்புடன் வாழ சில வாஸ்து குறிப்புகளையும் பின்பற்றினால் வீட்டில் செல்வம் பெருகும்.

வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும் | Astrology Veetil Selvam Athikarikka Ventiyavai

லட்சுமி தேவி மற்றும் குபேர் ஆகியோரின் அருளை பெற வீட்டில் சில பொருட்களை கண்டிப்பாக வைக்க வேண்டும். அது மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்புக்கான வழியைக் காட்டும் என்பது ஐதீகம்.

வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும் | Astrology Veetil Selvam Athikarikka Ventiyavai

விநாயகர்-லட்சுமி-குபேர் சிலை

வீட்டில் பணப் புழக்கம் அதிகரிக்க, மகா லட்சுமி, குபேர் மற்றும் விநாயகர் சிலைகளை பூஜை அறையில் வைக்க வேண்டும். இம்மூன்று கடவுள்களையும் முறையான சடங்குகளுடன் தினமும் வழிபட வேண்டும். இதைச் செய்வதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் பெருகத் தொடங்கி வீடெங்கும் சந்தோஷம் பரவும்.

வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும் | Astrology Veetil Selvam Athikarikka Ventiyavai

தேங்காய் கலசம்

இந்து மத நம்பிக்கைகளின்படி, செல்வம் மற்றும் செழிப்பைப் பெற, வீட்டின் வடகிழக்கு மூலையில் மங்கள கலசத்தை வைக்கலாம். அந்த கலசத்தில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு செப்பு காசை வைக்கவும். அதன் பிறகு அதில் தேங்காய் மற்றும் மா இலைகளை வைத்து அதன் முகத்தில் மஞ்சள் குங்குமத்தை இட வேண்டும். அப்படி செய்வதினால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் பரவும்.

வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும் | Astrology Veetil Selvam Athikarikka Ventiyavai

மஞ்சள் துணி

மகா லட்சுமி- குபேரனின் அருளைப் பெற, வெள்ளைக் கோதுமையை மஞ்சள் அல்லது குங்குமப்பூவில் ஊறவைத்து உலர்த்தவும். இதன் பிறகு, அந்த வெள்ளை நிரம் மஞ்சள் நிறமாக மாறியதும், அவற்றை சிவப்பு துணியில் கட்டி வீட்டின் முன் பக்கத்தில் வைக்கவும். மஞ்சள் லட்சுமி தேவியின் சின்னம். இப்படி இதனை வீட்டில் கட்டுவதால் பணம் கிடைக்கும் வழிகள் அதிகரிக்கும். சந்தோஷம் பெருகும்.

வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும் | Astrology Veetil Selvam Athikarikka Ventiyavai

நாணயங்கள்

மகா லட்சுமி மற்றும் குபேரரின் ஆசீர்வாதத்தைப் பெற 3 நாணயங்களை பாதுகாப்பாக ஒரு சிவப்பு துணியில் கட்டி வீட்டின் பூஜையறையில் தொங்கவிடலாம். இப்படி செய்வதால் பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.

வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும் | Astrology Veetil Selvam Athikarikka Ventiyavai

மீன் உருவம்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் மற்றும் நல்ல ஆரோக்கியம் நிலைத்து இருக்க நீங்கள் ஒரு வெள்ளி மீன் சிலையை செய்து வீட்டில் வைக்கலாம். இந்த வகை சிலை வீட்டில் அமைதி மற்றும் செழிப்புக்கு வழி வகுக்கும். நீங்கள் விரும்பினால், சுவரில் கூட மீன் ஓவியத்தை மாட்டி வைக்கலாம்.

வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும் | Astrology Veetil Selvam Athikarikka Ventiyavai