எல்லோருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் தக்காளி பிரியாணி ஒரு வித்தியாசமான சுவையில் இருப்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

தக்காளியில் பிரியாணி செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவார்கள்.
தக்காளி சாதமே மிகவும் சுவையாக இருக்கும். இந்த தக்காளி சாதத்தை விட பல மடங்கு சுவையில் தக்காளி பிரியாணி எப்படி செ்யயலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- 2 கப் பாஸ்மதி அரிசி
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 2 இன்ச் பட்டை
- 4 ஏலக்காய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 பெரிய வெங்காயம் மெல்லியதாக நறுக்கியது
- 2 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் மிளகாய் தூள்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி சர்க்கரை
- ¼ கப் கொத்தமல்லி இலைகள் பொடியாக நறுக்கியது
- ¼ கப் புதினா இலைகள் பொடியாக நறுக்கியது
- 1 கப் கெட்டியான தேங்காய்ப்பால்
- 2 கப் தண்ணீர்
செய்முறை
தக்காளி பிரியாணி செய்ய முதலில் பாஸ்மதி அரிசியைக் கழுவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து, தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் ஒரு குக்கரில் எண்ணெயை ஊற்றிச் அதை சூடாக்கவும். அதில் பட்டை, சோம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
இவற்றை ஒரு நிமிடம் வரை பொரிய விடவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். இதன் பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் உப்பு மற்றும் சர்க்கரையை சேர்த்து கிளற வேண்டும். மசாலா பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5 நிமிடங்கள் வேகவைத்து புதினா கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் ஊறவைத்த அரிசி, தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கிளறவும். இதை 10 நிமிடம் வேக விட்டு இறக்கினால் தக்காளி பிரியாணி தயார்.
