இங்கிலாந்தில் புதிய விடுமுறைக்கால வீடுகளுக்குத் தடை விதித்திருந்த ஒரு கடற்கரைக் கிராமம், தற்போது இரண்டு குடியிருப்புப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

புதிய விடுமுறைக்கால வீடுகளுக்கு தடை

இங்கிலாந்தின் நார்தம்பர்லாந்தில் உள்ள பீட்னெல்லில் புதிய விடுமுறைக்கால வீடுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

8 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய இடங்களில் கட்டப்படும் அனைத்து வீடுகளும் நிரந்தர வசிப்பிடங்களாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதியை பீட்னெல் அறிமுகப்படுத்தியது.  

2021ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கிராமத்தில் உள்ள சுமார் 750 வீடுகளில் ஏறத்தாழ 61 சதவீதம் இரண்டாவது வீடுகளாவோ அல்லது விடுமுறைக்கால வாடகைகளாகவோ இருந்தன. 

இரண்டு குடியிருப்புப் பகுதிகளாக

இந்த நிலையில், கடற்கரை கிராமம் இரண்டு குடியிருப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

england village split now with two estatesஒன்று ஆண்டு முழுவதும் வசிக்கும் குடியிருப்பாளர்களால் நிரம்பியுள்ளது; மற்றொன்று பழைய இரண்டாவது வீடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. 

அதாவது, புதிய குடியிருப்புப் பகுதியான The Kilns முழுநேரக் குடியிருப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அருகிலுள்ள 'Bernicia Way' இரண்டாவது வீடுகளையும், விடுமுறைகால வாடகை வீடுகளையும் கொண்டுள்ளது.

உள்ளூர்வாசிகள் கருத்து

இதுகுறித்து கருத்து தெரிவித்த உள்ளூர்வாசிகள், இரண்டாவது வீடுகள் மீதான கடுமையான நடவடிக்கை தங்கள் சமூகத்தின் சில பகுதிகளுக்கு புத்துயிர் அளிக்க எவ்வாறு உதவியுள்ளது என்பதை இந்தப் பிரிவு காட்டுகிறது என்று கூறுகின்றனர்.

மேலும், இந்தக் கட்டுப்பாடு கிராமத்திற்கு ஆண்டு முழுவதும் வசிக்கும் குடியிருப்பாளர்களை அதிக அளவில் கொண்டு வர உதவியதாகவும், சமூகத்தை வலுப்படுத்தியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது வீடுகளின் பெருக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதல் சமூகங்களில் நார்தம்பர்லாந்து (Northumberland) கிராமமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  

england village split now with two estates