நாம் காலையில் எழுந்ததும் சில விடங்களை உடனே பார்ப்பது அன்றைய நாளயே பாழாக்கி விடும் என்று கூறப்படுகின்றது. அது பற்றி பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, அதிகாலையில் சில விஷயங்களைப் பார்ப்பது நமது அதிர்ஷ்டத்தைப் பலவீனப்படுத்தி, நமது முன்னேற்றப் பாதையில் தடைகளை உருவாக்கு என கூறப்படுகின்றது.
இது பலரின் வழக்கத்தில் இருப்பதால் இந்த விடயங்கள் செய்வதை வாஸ்து சாஸ்திரம் மறுக்கிறது. இது என்னென் விடயங்கள் என்பதை அறிந்து நமது வாழ்க்கையில் அந்த விடயங்களை கைவிடுவோம்.

கண்ணாடி
- தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் கண்ணாடியில் பார்ப்பது மிகவும் அசுபமானதாகக் கருதப்படுகிறது. இதனால்தான் அறையில் கண்ணாடிகள் வைப்பது தவிர்க்கப்படுகிறது. உங்கள் அறையில் கண்ணாடி இருந்தால், நீங்கள் தூங்கும்போது அல்லது விழித்திருக்கும்போது உங்கள் பிம்பம் தெரியாத இடத்தில் அதை வையுங்கள்.
கழுவாத பாத்திரங்கள்
- இரவு முழுவதும் கழுவாத பாத்திரங்களை வைத்துவிட்டு, காலையில் எழுந்தவுடன் அவற்றைப் பார்த்தால், அது உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும். எனவே உறங்குவதற்கு முன் சமையலறையைச் சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் காலையில் அழுக்கு பாத்திரங்களை பார்க்க நேரிடாது.
நிழல்
- ஜோதிட சாஸ்திரத்தின்படி, காலையில் எழுந்தவுடன் ஒருவர் தனது அல்லது மற்றவர்களின் நிழல்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நல்ல வெளிச்சத்துடன் நாளைத் தொடங்க முயற்சி செய்யுங்கள். சூரிய ஒளி உள்ளே வரும் வகையில், நீங்கள் எழுந்தவுடன் உங்கள் வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து விடுங்கள்.
கடிகாரம்
- காலையில் எழுந்தவுடன் நின்றுபோன கடிகாரத்தைப் பார்ப்பது மிகவும் அபசகுனமாகக் கருதப்படுகிறது. இது உங்கள் வேலையில் தடைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. உங்கள் அறையில் நின்றுபோன கடிகாரம் இருந்தால், அதை உடனடியாகச் சரிசெய்யுங்கள் அல்லது அகற்றுங்கள்.
விலங்புகு படம்
- காலையில் எழுந்தவுடன் காட்டு விலங்குகளின் படங்களைப் பார்க்கக் கூடாது. அது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, உதிக்கும் சூரியன், ஒரு மலர், ஒரு மலை அல்லது ஒரு தெய்வத்தின் படத்தைப் பாருங்கள். இது உங்கள் நாளைச் சிறப்பாகக் கழிக்க உதவும்.
