சினிமாவில் பல சீரியல்களிலும் திரைப்படத்திலும் ஏன் சமீபத்தில் பூஜை படத்தில் நடித்த நடிகை சபர்ணா தன்னுடைய 29 வயதில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

நடிகை சபர்ணா
சினிமாவில் நடிக்கும் பல தனிப்பட்ட கதைகளை அறிந்திருப்போம். ஒவ்வொன்றும் உவ்வொரு விதத்தில் வலிகளை தாண்டி வந்த கதைகளாக இருக்கும்.
தங்களுக்குள் என்ன கஷ்டம் இருந்தாலும் அந்த கஷ்டத்தை மறைத்து கமராவில் காட்டாமல் ரசிகர்களுக்காக நடிப்பார்கள். நடிகை அபர்ணாவும் அப்படி தான்.
நடிகை சபர்ணா கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர். கோவை அரசு கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ளார்.

கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே சபர்ணாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அவர் சென்னைக்கு வந்து பல கம்பனிகள் ஏறி இறங்கி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
இதன் பின்னர் இவருக்கு தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இதன் பின்னர் இவர் பாசமலர், சொந்த பந்தம், புது கவிதை, தென்றல், மாயமோகினி என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் விஷால் நடித்த பூஜை படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாகவும், மிகாமன் படத்தில் ஹன்சிகா மோத்வானியின் தோழியாகவும் நடித்தார். இப்படி இருக்க இவர் ஏன் 29 வயதில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

உயிரை மாய்த்துக்டிகொண்ட சபர்ணா
சென்னையில் ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் சபர்ணா தனியாக வசித்து வந்துள்ளார். இதன்போது இவரின் வீடு மூன்று நாட்களுக்கு மேலாகியும் திறக்காமல் இருந்துள்ளது.
மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் விசி உள்ளது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை தொட்டதுமே கதவு திறந்துள்ளது. இதன் பின்னே வீட்டிற்குள் சபர்ணா கை வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில், உடல் அழுகிய நிலையில் உடலில் ஒரு துணி கூட இல்லாமல் கிடந்துள்ளர்.
அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் அவர் இறந்து மூன்று நாட்கள் என தெரிய வந்தது.
அது எப்படி உடலில் துணி இல்லை கைகள் வெட்டப்பட்டு உள்ளது ஆனால் கதவு பூட்டப்படவில்லை எனவே இவர் மர்ம முறையில் இற்நதுள்ளார் என மேலும் விசாரணை நடைபெற்றது.

போலீசார் நடத்திய விசாரணையில் இது தற்கொலை என தெரிவித்தனர். மேலும் சபர்ணா படவாய்ப்பு இல்லாததால் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மிகவும் திணறி இருக்கிறார்.
சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் வெறும் டீயை மட்டுமே குடித்துக்கொண்டு பசியை போக்கி உள்ளார் அவரின் வீடு முழுக்க டீ கப்புகள் இருந்தன என போலீசார் தெரிவித்னர்.
