எண்கணிதத்தின்படி குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் அதிவேக அறிவை கொண்டவர்கள் என்று கூறப்படுகின்றது.
எண்கணிதம்
எண் கணிதத்தின்படி, ஒரு குறிப்பிட்ட எண்ணுடன் பிறந்த குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகளாக இருப்பார்கள் எனப்படுகின்றது. அவர்களின் புத்தி மிகவும் கூர்மையாக இருப்பதால், அவர்கள் விஷயங்களை மிக விரைவாகக் கற்றுக்கொள்வார்களாம்.
இவர்களுக்கு இளம் வயதிலிருந்தே தலைமைப் பண்புகள் அதிகமாக இருக்கும். அவர்கள் வாழும் இடமெல்லாம் தமக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.

ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதில் கைதேர்ந்தவர்களாம் இவர்கள்.
அவர்கள் இடர்களை எதிர்கொள்ளும் அதிகத் திறனைக் கொண்டிருப்பதால், அது அவர்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக மாற்றுகிறது.
இந்த குணத்திற்கு சொந்தகாரர்கள் வேறு யாருமில்லை அவர்கள் மூல எண் 5 கொண்டவர்களாம். 5, 14, மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு 5 என்ற எண் இருக்கும்.
இந்த மூல எண் கொண்டவர்களின் குணத்தை இன்னும் விரிவாக பார்க்கலாம்.

எண் 5 பிறந்தவர்களின் சிறப்புக்கள்
மூல எண் 5 கொண்டவர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். புதன் கிரகம் ஜோதிடத்தில் நுண்ணறிவு, தர்க்கம், தகவல் தொடர்பு மற்றும் வணிகம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது.
எனவே, இந்த எண்ணுடன் பிறந்த குழந்தைகள் வளரும்போது பெரும்பாலும் வணிகத்தில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு சிறுவயதிலிருந்தே ஒரு விடயத்தில் சரியான முடிவை எடுக்கும் திறன் அதிகமாக இருக்கும்.

அதுவும் ஒரு முடிவை எடுக்க நினைத்துவிட்டால் தயங்காமல் அந்த முடிவை எடுப்பார்களாம். இவர்களுடைய முடிவுகள் எப்போதும் சரியாக தான் இருக்குமாம்.
இடர்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இவர்களிடம் அதிகமாக உள்ளது. வணிகத்தின் மிகப்பெரிய 'இடர்களை கூட இவர்கள் சாதாரணமாக தீர்த்து விடுவார்கள் எனப்படுகின்றது.

இவர்களிடம் சிறந்த தகவல் தொடர்புத் திறன் இருக்குமாம். இவர்கள் தங்கள் வார்த்தைகளால் எல்லோரையும் கவரக்கூடியவர்கள். இந்தக் குணம், அவர்கள் தொழிலில் பெரும் வெற்றி அடைய உதவுகிறது.
இவர்கள் பன்முகத் திறமை கொண்டவர்கள். ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாளும் திறன் இவர்களுக்கு உண்டு.
