நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லாததாற்கான காரணத்தை அவரது தாயார் கூறியுள்ளார்.
விஜய்
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றி அரசியல் களத்தினை ஆடடம் காண வைத்துள்ளது. பல தடைகளை தாண்டிய வெற்றி பெற்ற விஜய்க்கு பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் விஜய் முதலமைச்சர் இருக்கையில் அமர்வதற்கு பல சிக்கல்கள் எழுந்த நிலையில், மீதம் தேவைப்பட்ட 10 தொகுதிகளை சில கட்சியினர் கூட்டணி வைப்பதாக கூறியதால் தற்போது ஆட்சி அமைத்துள்ளார்.
மனைவியின் விவாகரத்து பிரச்சனை, ஜனநாயகம் படம் லீக் என அனைத்தையும் சமாளித்து வரும் நிலையில் தற்போது முதலமைச்சராக மே மாதம் 10ம் தேதி பதவியேற்றுள்ளார்.
காரணம் என்ன?
இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா, ஏன் விஜய் ஆறு மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் அவரது அப்பா சந்திரசேகரின் வளர்ப்பு தான் என்று கூறியுள்ளார். விஜய் ஆறு மணிக்கு மேல் படப்பிடிப்பில் கூட இருக்கமாட்டாராம்.

அவருக்கு கொடுக்கப்பட்ட நேரம் என்று பார்த்தால் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தானாம். இந்த நேரத்தில் படப்பிடிப்பில் இருப்பதாக அவரது தாய் கூறியுள்ளார்.
சில சமயம் அவருக்கு இரவு ஷுட்டிங் என்றால் மட்டுமே அன்றைய தினம் வெளியே செல்வாராம். ஆனால் அந்த நேரங்களில் காலையில் வீட்டில் தான் இருப்பதாக அவரது தாய் விளக்கம் அளித்துள்ளார்.

