இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில், குட்டி இசை கலைஞர்கள் vs இசை ரசிகர்கள் என்ற தலைப்பில் சிறுவர்களின் திறமைகளை உலகறியசெய்யும் வகையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற இலங்கையின் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சிறுவணொருவர் மலரே மௌனமா?...என்ற பாடலை அச்சி அசல் அப்படியே புல்லாங்குழலில் இசைத்து அரங்கத்தையே வியப்பில் ஆழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுவதுடன், ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் தனது இசைத்திறமையை வெளிப்படுத்திய இலங்கை சிறுவனனின் காட்சிகள் அடங்கிய promo காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பார்வையாளர்களை குவித்து வருகின்றது.
