சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் நடைபெற்ற 'Start Run, Stop Drugs' விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார். 

52 வயதிலும் மரதான் போட்டியில் உட்சாகமாக ஓடிய CM விஜய் - காணொளி வைரல் | Cm Vijay Runs In Marina Marathon Video Goes Viral

முதலமைச்சர் விஜய்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற 'Start Run, Stop Drugs' விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து ஓடினார். 

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு முன், அண்ணா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த Anti Drug Run 2026 பிரச்சாரப் பேனரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகத்தை எழுதி கையொப்பமிட்டு, பிரச்சாரத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

52 வயதிலும் மரதான் போட்டியில் உட்சாகமாக ஓடிய CM விஜய் - காணொளி வைரல் | Cm Vijay Runs In Marina Marathon Video Goes Viral

தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

52 வயதிலும் மரதான் போட்டியில் உட்சாகமாக ஓடிய CM விஜய் - காணொளி வைரல் | Cm Vijay Runs In Marina Marathon Video Goes Viral

வைரல் காணொளி

சுமார் 2 கி.மீ., தூரம் வரை ஓடிய விஜய், இடையிடையே தனது ஓட்டத்தை நிறுத்தி, ஓய்வெடுத்த விஜய், பின் மீண்டும் ஓடத்தொடங்கினார்.

விஜய் இந்த மாரத்தான் போட்டியை தொடங்கிவைப்பார் என எதிர்பார்க்கப்பட்டாலும், இவ்வளவு தூரம் வரை முதலமைச்சர் ஓடுவார் என பலரும் எதிர்பார்க்கவில்லை.

52 வயதாகும் முதலமைச்சர் விஜய் உட்சாகத்துடன் மரதானில் ஓடிய காணொளி தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.