கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரஷ்மிகா மந்தனா, இவர் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் தனது கவனத்தை திருப்பிய நடிகர் ரஷ்மிகா மந்தனா, தற்போது அங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.

மேலும் தற்போது இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான், திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் நடிகை ரஷ்மிகா அவரின் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், இதனை கண்ட ரசிகர்கள் இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்.