ஸ்காட்லாந்து நாட்டின் தொழிற்கட்சி எம்.பி.யான மோனிகா லெனான் தலைமையிலான நான்கு ஆண்டு பிரச்சாரத்திற்குப் பிறகு, அந்நாட்டின் அனைத்து பெண்களுக்குமான சானிட்டரி வகை சுகாதார தயாரிப்புகளை இறுதியாக இலவசமாகவும் அனைத்து பெண்களும் அணுகக்கூடியதாகவும் ஆக்கியுள்ளது.
இதன் தொடர்பான சட்ட மசோதா இறுதியாக செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் ஒரு தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, இது பேட் மற்றும் டம்பான்கள் போன்ற இலவச சுகாதார பொருட்கள் தேவைப்படும் எவருக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்கள் போன்ற அனைத்தும் பெண் சுகாதார தயாரிப்புகளை இலவசமாக பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மசோதா முதன்முதலில் ஏப்ரல் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அதன் முக்கிய நோக்கம் நாட்டில் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த செய்தியை முதலில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வமாக பகிரப்பட்டது, பின்னர் லெனான் அவர்கள் சமூகவலைத்தளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
அதில், "பெண்களுக்கான சுகாதார பொருட்கள் தொடர்பாக பிரச்சாரம் செய்த அனைவருக்கும் மற்றும் மசோதாவை ஆதரித்த எனது எம்எஸ்பி சகாக்களுக்கும் நன்றி. ஸ்காட்லாந்திற்கு ஒரு பெருமையான நாள் மற்றும் சுகாதார தயாரிப்புகளுக்கு உலகளாவிய இலவச அணுகலை அடைய முடியும் என்பதற்கான ஒரு சமிக்ஞை." என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்காட்லாந்து நாடு பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளை இலவசமாக்கும் முதல் தேசமாகிறது. இந்த வரலாற்று முடிவு அனைவருக்குமான சுகாதார மற்றும் சுகாதாரத்திற்கான உலகளாவிய அணுகலை சாத்தியமாக்கும் சமிக்ஞையை காட்டுகிறது. மேலும் இது ஒரு இலக்காக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.