விராலிமலை சன்னதி தெருவை சேர்ந்தவர் விவேகானந்தம். இவரது மகன் காத்தவராயன்(வயது 24). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் விராலிமலை கடைவீதிக்கு வந்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றபோது எதிரே சிமெண்டு ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், படுகாயம் அடைந்த காத்தவராயனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லால்குடியை சேர்ந்த லாரி டிரைவர் செல்வராஜ் (51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி
- Master Admin
- 27 November 2020
- (402)
தொடர்புடைய செய்திகள்
- 14 January 2021
- (616)
பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வி வந்த தெர...
- 16 January 2021
- (544)
கணவரை காப்பாற்ற முயன்ற இளம்பெண் மின்சாரம...
- 21 January 2021
- (793)
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்!
- 01 April 2026
ரஷ்யா எரிபொருள் இலங்கைக்கு...
- 01 April 2026
2026 இல் இலங்கை ரூபாய் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி
- 01 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
