மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.