தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மஞ்சளகிரி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஜோதிபுரம் கிராமத்தை சேர்ந்த எல்லப்பா என்பவரது மகன் லாளியப்பா (வயது 23) என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

தற்போது அந்த மாணவியின் உடல் சோர்வை கண்டு அச்சமடைந்த தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். 

அப்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் தாய் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை சூப்பிரண்டு சங்கீதா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி லாளியப்பாவை தேடி வருகின்றனர்.