புதுக்கடை உயர்நீதிமன்ற கட்டிடத் ​தொகுதியில் இன்று மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தைச் சூழ பெரும் புகை மூட்டம் காணப்படுகிறது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, தீயணைப்புப் படையினர் 9 வாகனங்களுடன் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.