சீரியல் நடிகை சித்ரா தற்கொலையில் விஜய் டிவி விஜே ரக்ஷனுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்து வரும் செய்திகள் குறித்து ரக்ஷன் மனம் திறந்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்தன.. சித்ரா கொலை செய்யப்பட்டார் என்று பலரும் தெரிவித்து வந்தனர். இருப்பினும் அவர் தற்கொலைதான் செய்துகொண்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டிதயாக, ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விஜே ரக்ஷன் சித்ராவுடன் டேட்டிங் செய்ததாகவும், தற்போது அந்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வைத்து மிரட்டியது தான் சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியது என பல செய்திகள் வெளியாகின.

தற்போது ரக்ஷன் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளார். நானே குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறேன். சித்ராவுடன் நான் டேட்டிங் செய்ததாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய். சித்ரா எனது நல்ல நண்பர்” என்று தெரிவித்துள்ளார். ரக்ஷன் சித்ராவின் இறுதிச் சடங்கில் நேரில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது