வெலிகந்தை பிரதேசத்தில் மா அரைக்கும் இயந்திரத்தில் மா அரைப்பதில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கூந்தல் சிக்கி கொண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகந்தை மஹிந்தாகம கடவத்தமடு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய சந்திரிகதக என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சுயதொழிலுக்காக பொருத்தப்பட்ட மாவரைக்கும் இயந்திரத்தில் குறித்த பெண் வழமைபோல சம்பவதினமான நேற்று மாலை மா அரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ள நிலையில் அவரது கூந்தல் இயந்திரத்தில் சிக்கியுள்ளதால் அவர் பலமாக சுற்றப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
பெண் ஒருவருக்கு எமனாக மாறிய கூந்தல்
- Master Admin
- 31 December 2020
- (508)

தொடர்புடைய செய்திகள்
- 06 February 2025
- (106)
பெண்கள் இந்த குணமுள்ள ஆண்களுடன் மட்டுமே...
- 12 May 2022
- (522)
பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!
- 23 March 2024
- (461)
காகம் வீட்டிற்குள் வருவது அதிர்ஷ்டமா? மு...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.