கோவா மாநில முன்னாள் முதல்-மந்திரி, பிரதாப் சிங் ரானே. போரியம் தொகுதி எம்.எல்.ஏ.வான இவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதை அவர்களது மகனும், மாநில சுகாதார மந்திரியுமான விஸ்வஜித் ரானே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது தந்தை பிரதாப் சிங் ரானே (முன்னாள் முதல்-மந்திரி மற்றும் போரியம் தொகுதி எம்.எல்.ஏ.), மற்றும் எனது தாய் விஜயாதேவி ரானே ஆகிய இருவருக்கும் கொரோ னா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை கோவா மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இருவரும் கோவா மருத்துவக்கல்லூரியில் டாக்டர் பண்டேகர் தலைமையிலான எங்கள் மருத்துவக்குழுவின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.