இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள தாங்கள் மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் (எஞ்சின்) பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஸ்பவனம் கடற்பகுதியில் பலத்த காற்றால் திசை மாறி கரை சேர்ந்த இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் 3 பேரையும் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், ரீகன் , குருபரன் ஆகிய 3 பேரும் கடலில் நேற்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் படகு இயந்திரம் பழுதானதால் பலத்த காற்று காரணமாக திசைமாறி புஸ்பவனம் பகுதிக்கு வந்த 3 மீனவர்களையும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கைது செய்துதோடு, அவர்களின் படகையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.