திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் மன்சுராபாத், அவலூர்பேட்டை துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.