இவ்வருடத்திற்கான வாக்காளர் பெயர் பட்டியலில் கைச்சாத்திடும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சட்டத்தரணி ஜீ.புஞ்சிஹேவா இதனை தெரிவித்தார்.
வாக்காளர் பெயர் பட்டியலின் மீள் திருத்தப் பணிகளில் சுமார் 80 சதவீதம் தற்போதைய நிலையில் நிறைவு பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாக்காளர் பெயர் பட்டியல் மீள்திருத்தம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆட்சேபனைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கு மாத்திரம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் கால எல்லை பெற்றுக் கொடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, நேற்றைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
- Master Admin
- 20 January 2021
- (550)

தொடர்புடைய செய்திகள்
- 18 September 2023
- (161)
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க இந்த பானங...
- 28 June 2025
- (126)
இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரப...
- 30 August 2024
- (340)
அடுத்த ஆண்டில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராக...
யாழ் ஓசை செய்திகள்
சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி உயிரிழப்பு
- 02 July 2025
கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி
- 02 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.