தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் கடந்த 8-ந்தேதி முதல் பள்ளிகளிலேயே எடுக்கப்பட்டு வருகின்றன.


நடுநிலைப்பள்ளிகளையும் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஆணைக்கவுண்டன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றேர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விடுமுறை காலத்திலாவது பூட்டியே கிடக்கும் பள்ளி கட்டிடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு தரமான முறையில் ஏற்படுத்தி தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.