செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய பெருமை இந்திய வம்சாவளி விஞ்ஞானியான ஸ்வாதி மோகனுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் படம் பிடித்து அனுப்பியது.
பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கிய சில மணி நேரங்களில் குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் இரு படங்களை அனுப்பியுள்ளது. இந்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
வருங்காலத்திலும் பெர்சவரன்ஸ் ரோவர் நிறைய படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கலாம்.
செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய படங்கள்
- Master Admin
- 20 February 2021
- (543)

தொடர்புடைய செய்திகள்
- 05 October 2023
- (1069)
பூவன் வாழைப்பழம் கேள்வி பட்டிருக்கீங்களா...
- 14 November 2023
- (250)
கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா... அப்...
- 07 August 2020
- (452)
அதிபர் ட்ரம்ப்பின் பதிவை அதிரடியாக நீக்க...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.