வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 9 பேருக்கும் வவுனியாவில் 3 பேருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 370 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

இதில்12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும், தாதிய மாணவர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.