யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் இருவர் கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் 778 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.