சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் கொள்கலன் பாரவூர்தியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறியொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்து குறித்து கொள்கலன் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கொள்கலன் பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்த விபத்தில் விற்பனை நிலையமொன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.