அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் வைத்தியர்களுக்கான சுமார் 4,000 வெற்றிடங்கள் நிலவுவதாக அமைச்சு கூறியுள்ளது.
பல்கலைக்கழகங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் சுமார் ஆயிரம் வைத்தியர்கள் வௌியேறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒரு பிரிவினர், தனியார் துறையில் பணியை தொடர்வதாகவும் மற்றுமொரு பிரிவினர் உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வௌிநாடுகள் நோக்கி செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.