யாழ்ப்பாணம் நகரி்ல் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்று (23) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் வேலை முடித்து வீடு திரும்பிய போது பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய கும்பல் அவரை வழிமறித்து தடுத்துள்ளது.
அவர்களிடமிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு வீடொன்றுக்குள் இளம் பெண் சென்ற போதே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இளம் பெண்ணை வழிமறித்து மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்!
- Master Admin
- 24 April 2021
- (577)

தொடர்புடைய செய்திகள்
- 25 February 2024
- (274)
திருமண வாழ்க்கை சிறக்கணுமா? அப்போ படுக்க...
- 11 June 2020
- (519)
இந்து ஆலயங்கள் திறக்கப்படும் போது பின்பற...
- 29 April 2025
- (209)
மே7 புதன் பெயர்ச்சி: செல்வத்தில் உச்சம்...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.