வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள் 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரைப் பவுண் நகை என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்த மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரச அதிகாரி ஒருவரின் வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது
- Master Admin
- 01 May 2021
- (411)

தொடர்புடைய செய்திகள்
- 13 October 2020
- (344)
நாட்டில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்ற...
- 30 October 2023
- (1735)
எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்...
- 11 March 2025
- (120)
கணவன்- மனைவி சண்டை தீரணுமா? அப்போ இந்த 3...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.