மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவனை நேற்று (06) மாலை கைது செய்ததாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ தினமான நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞனை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 70 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரான இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.