69 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கொத்மலை பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரொனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 799 ஊழியர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலையில் நுவரெலியா, கொத்மலை, புஸல்லாவை, ராவணாகொட மற்றும் நாவலப்பிட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தொழில் புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
69 பேருக்கு கொரோனா - மூடப்பட ஆடைத் தொழிற்சாலை!
- Master Admin
- 11 May 2021
- (1315)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2021
- (465)
48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை...
- 11 May 2021
- (588)
ரயில் சேவைகளில் மாற்றம்!
- 24 March 2021
- (381)
மருதானை உணவகத்தில் தீ: ஒருவர் பலி
யாழ் ஓசை செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
