பொதுவாக ஒவ்வொரு வாரத்திலும் வரும் ஒவ்வொரு கிழமை நாளும் ஒரு கிரகங்களுக்குரியது.
அப்படி பார்த்தால் செவ்வாய்க் கிழமையானது செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த நாளில் பொதுவாக எல்லோரும் நல்ல காரியங்களை செய்ய ஏற்ற நாள் என்பதால் பல நல்ல காரியங்கள் செவ்வாய்க்கிழமையில் தொடங்குவார்கள்.
அந்தவகையில் செவ்வாய்கிழமையில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது, வாங்க கூடாது என்று ஒரு முறை இருக்கிறது. அப்படி செவ்வாய்க்கிழமைகளில் செய்யக் கூடாத சில விடயங்கள் இவை தான்.
செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை
- இரத்தம் சம்பந்தப்பட்ட எந்த விடயங்களையும் செய்யக்கூடாது
- தலை முடி வெட்டுதல், நகம் வெட்டுதல், ஷேவிங் செய்தல் போன்றவற்றை செய்யவே கூடாது
- செவ்வாய்க் கிழமையில் செல்வத்தை அதிகம் செலவு செய்ய கூடாது
- வீட்டில் இருக்கும் பொருட்களை வெளியில் தூக்கி எறியக் கூடாது
- செவ்வாய்க்கிழமையில் யாரும் எந்த தீங்கும் நினைக்கவும் கூடாது செய்யவும் கூடாது
- செவ்வாய் கிழமையில் கடன் வாங்க கூடாது
- தங்கத்தை அடகு வைக்க கூடாது
கொடுக்க கூடாத பொருட்கள்
- செவ்வாய்க்கிழமையில் புதிய வீட்டை வாங்க கூடாது பூமி பூஜை செய்யவும் கூடாது மீறி செய்தால் பண இழப்பு ஏற்படும் குடும்பத் தலைவருக்கு உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.
- கருப்பு நிறத்தில் ஆடைகளை வாங்கவே கூடாது இது மாங்கல்ய தோஷ வினைகளை ஏற்படுத்தும்.
- இரும்புப் பொருட்களை வாங்கினால் அசுபகமாகவும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தும்.
- கண்ணாடிப் பொருட்களை வாங்கினால் பண இழப்பும் குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகளும் ஏற்படும்.
- செவ்வாய்க்கிழமையில் புதிய பொருட்களை வீட்டிற்கு கொண்டு வரக் கூடாது அதிலும் திருமணம் முடித்தப் பெண்கள் அழகு சாதன பொருட்களை வாங்கினால் திருமண வாழ்க்கைப் பாதிக்கும்.
- பாலில் செய்யப்பட்ட எந்த இனிப்புக்களையும் வீட்டிற்கு வாங்க கூடாது இது வீட்டில் பண இழப்பையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும்.
- இந்த நாளில் மது அருந்தவும், இறைச்சி சமைக்கவும் கூடவே கூடாது அது போல வீட்டிற்கு வாங்கவும் கூடாது.
- இதனால் வீட்டில் நோய்வாய் பட நேரும், பண இழப்பும் ஏற்படும். வெங்காயம் மற்றும் பூண்டுகளையும் வாங்க கூடாது.