காதல் என்ற ஒரு உணர்விற்கு அனைவரும் கூறும் ஒரே அடையாளம் ரோஜா பூ தான்.

இந்த பூக்கள் இதற்கு மட்டுமல்ல பெண்களுக்கான அலங்கார பொருட்கள் செய்வதற்கும் மூலப்பொருளாக பயன்படுகின்றது.

ஆயுள் வேத மருத்துவத்தில் மருந்துகளுக்கு ரோஜா பூவை தான் முக்கிய பொருளாக பயன்படுகின்றார்களாம்.

அந்த வகையில் ரோஜா பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ரோஜா இதழில் இத்தனை நன்மைகளா? இ1. ரோஜாக்களில் இருக்கும் இதழ்களை எடுத்து கொள்வதால் உடலில் இருக்கும் வெப்பநிலை பேலன்ஸாகின்றது.

2. அசிடிட்டி, வீக்கம் மற்றும் சரும எரிச்சல் ஆகிய பிரச்சினைகளுக்கு ரோஜா இதழ்கள் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.

3. செரிமான பிரச்சினையுள்ளவர்கள் ரோஸ் வாட்டர் அல்லது ரோஜா இதழ்கள் சேர்க்கப்பட்ட தண்ணீரை குடிப்பது சிறந்ததாக இருக்கும். அத்துடன் வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்சினையும் இந்த ரோஜா இதழ்கள் சரிச் செய்கின்றது.

4. சருமத்திற்கு தேவையான ஊட்டசத்துக்களை தந்து ரோஜா இதழ்கள் புத்துணர்ச்சியளிக்கின்றது. மேலும் ரோஜா இதழ்களை பேக் செய்து முகத்திற்கு போட்டு வந்தால் வறண்ட சருமம் ஈரப்பதமாகி சரும எரிச்சலை இல்லாமலாக்கும்.

5. மனநிலையை மேம்படுத்தும் ஆற்றல் ரோஜா இதழ்களுக்கு இருக்கின்றது. மன பதட்டம், ரிலாக்ஸ்சேஷன் ஆகிய பிரச்சினைகளுக்கு எசென்ஷியல் ஆயில் அல்லது ரோஸ்-இன்ஃப்யூஸ்ட் தயாரிப்புகள் சிறந்தது.