உம்பில் கண்கள் என்பது முக்கியமான உறுப்பாக காணப்படுகின்றது. பழங்கால மருத்துவ முறையினால் கண்பார்வையை சரிசெய்ய முடியுமாம். இதற்கு தெரிந்தெடுக்கப்பட்ட பொருள்ள என்னவெனில் நெய் ஆகும்.

இயற்கையில் காரத்தன்மை கொண்ட நெய் கண்களுக்கு மருந்தாகவும் காணப்படுகின்றது. குளிர்ச்சியை தரும் இதை எந்த காலத்திலும் நாம் பயன்படுத்தலாம்.

தினமும் இரவில் தூங்கும் முன் இரண்டு மூன்று சொட்டு பசுவின் நெய்யை தொப்புளில் தடவி வந்தால் கண்களுக்கு மட்டுமின்றி உடலின் 72 ஆயிரம் நரம்புகளுக்கும் ஊட்டம் கிடைக்கிறது.

இத்தனை ஆயிரம் நரம்புகளில் முதன்மையானது கண் நரம்பாகும். இவ்வாறு செய்வதால் கண்பார்வை அதிகரிப்பதுடன், கண்களின் பலவீனம் மற்றும் கண்களில் காணப்படும் தூசிகளையும் அகற்றுமாம்.

இந்த இடத்தில் நெய் தடவினால் வெள்ளை முடி கருப்பாக மாறுமா? ஆச்சரியமான தகவல் | Applying Ghee Body White Hair Issues

அதே சமயம், தினமும் இரண்டு துளிகள் இரண்டு நாசியிலும் போட்டால், இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

இவ்வாறு நீங்கள் 6 மாதங்களுக்கு தொடர்ந்து செய்து வர வேண்டும். பின்பு சில நாட்கள் ஓய்வுவிட்டு மீண்டும் இதனை தொடங்கலாம். ஆனால் இதன் முடிவுகளை 3 மாதங்களிலிருந்து நீங்கள் கண்கூடாகவே காணலாம்.

அதுவே குழந்தைகளுக்கு பயன்படுத்துகின்றீர்கள் என்றால் ஒரு மாதத்திற்கு ஒருமுறை சில நாட்கள் நிறுத்திவிட்டு கொடுக்கவும்.

இவ்வாறு பயன்படுத்தும் நெய்யை பிளாஸ்டிக் அல்லது இரும்புப் பெட்டியில் வைக்க வேண்டாம். களிமண், கண்ணாடி, எஃகு அல்லது வெள்ளி பாத்திரத்தில் வைக்கவும்.

இந்த இடத்தில் நெய் தடவினால் வெள்ளை முடி கருப்பாக மாறுமா? ஆச்சரியமான தகவல் | Applying Ghee Body White Hair Issues

தொப்புளில் நெய் தடவுவதால் கண்கள் மேம்படும், இளமையில் வளரும் வெள்ளை முடியும் கருப்பாக மாறத் தொடங்குகிறது.

ஆயுர் வேதத்தின் படி, நெய் உடலை சூடாக வைத்திருக்க உதவுவதுடன், மூக்கடைப்பு, சளிக்கு தீர்வாகின்றது. ஆம் காலையில் சில துளிகள் வெதுவெதுப்பான நெய்யை எடுத்து இரண்டு சொட்டு நாசியில் விட்டால் எந்தவொரு தொற்றும் நெருங்காதாம்.