இதுவரை முன்னோர்களை நினைக்காமல் அவர்களை மறந்தவர்கள், அமாவாசை தர்ப்பணம் கொடுக்காத, பாவத்தை போக்கிக் கொள்வதற்கான சிறப்பான நாள் மகாளய அமாவாசை.

மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களை வழிபட தவறியவர்களும் மகாளய அமாவாசை அன்று மட்டுமாவது முன்னோர்களை நினைத்து வழிபட்டு, தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

 

இதனால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவை நீங்கி வீட்டில் சுபிட்சம் ஏற்படும். புரட்டாசி மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் மற்றும் திருமணம் கைகூடும்.

இந்த ஆண்டு மகாளய அமாவாசை அதிக சிறப்புடையதாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த ஆண்டு மகாளய அமாவாசையானது சனி பகவானுக்குரிய சனிக்கிழமையில் வருகிறது. அதோடு சூரிய கிரகண நாளில் மகாளய அமாவாசை வருகிறது.

அதனால் இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளும், தானங்களும் இரு மடங்கு பலனை தருவதாக அமைகிறது. இந்த நாளில் முன்னோர்களை மனதார நினைத்து என்ன கோரிக்கைகளை முன் வைத்தாலும் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பது ஐதீகம். 

முன்ஜென்ம பாவங்களை நீக்கி முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவசையான இன்று இவ்வாறு வழிபடுங்கள் | Mahalaya Amavasai Valipaadu

மகாளய அமாவாசை

2023 பொதுவாக அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்குரிய நாள் என்பதால் இது மிக முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது.

அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை ஆகும். அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை வழிபட தவறியவர்கள், மகாளய பட்சத்தில் முன்னோர்களை வழிபட தவறியவர்களும் மகாளய அமாவாசையில் கண்டிப்பாக விரதம் இருக்கலாம்.

இந்த நாளில் செய்யும் வழிபாடு கொடுக்கும் தர்ப்பணம் ஆகியன பெயர் தெரிந்த, தெரியாத அனைத்து முன்னோர்களையும் சென்றடையும்.

இந்த ஆண்டு மகாளய பட்சம் அக்டோபர் 14 ம் திகதி நிறைவடைகிறது. மகாளய பட்சத்தின் நிறைவு நாளான அக்டோபர் 14 ம் திகதி மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது.

முன்ஜென்ம பாவங்களை நீக்கி முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவசையான இன்று இவ்வாறு வழிபடுங்கள் | Mahalaya Amavasai Valipaadu

சனிக்கிழமையில் வரும் மகாளய அமாவாசை

இந்த ஆண்டு மகாளய அமாவாசை சனிக்கிழமையுடன் இணைந்து வருகிறது. அதுவும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையுடன் சேர்ந்து வருவதால் இது இன்னும் கூடுதல் சிறப்பு பெறுகிறது.

ஆன்மிக ரீதியாக சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் மெளன விரதம் இருந்து தான தர்மங்கள் வழங்கினால் பித்ருதோஷம், காலசர்ப்ப தோஷம், சனி தோஷம் ஆகிய தோஷங்கள் விலகும்.

சூரிய பகவான், பித்ருக்களுக்கு உரிய கிரகம் ஆவார். இவரது மகன் சனி பகவான். இவருக்குரிய கிழமை சனி. அதனால் சனிக்கிழமையில் வரும் அமாவாசை அன்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, " ஓம் ஸம் சனீஸ்வராய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

எண்ணெய், கருப்பு எள் ஆகியவற்றை தானமாக வழங்க வேண்டும். இதனால் சனி பகவானின் அருள் கிடைக்கும். சனி பகவானின் அருள் இருந்தால் அதிர்ஷ்டம், செல்வ வளம், மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவை கிடைக்கும்.

சனி அமாவாசையில் விரதம் இருந்து, தானம் வழங்கினால் செல்வ வளமும், அனைத்து காரியங்களிலும் வெற்றியும் கிடைக்கும்.

முன்ஜென்ம பாவங்களை நீக்கி முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவசையான இன்று இவ்வாறு வழிபடுங்கள் | Mahalaya Amavasai Valipaadu

சனி அமாவாசையில் வழிபடும் முறை

வீட்டை சுத்தம் செய்து, கோமயம் தெளிக்க வேண்டும். வீட்டில் அமைதி நிலைத்திருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அமாவாசையில் புனித நீராடுவது சிறப்பானதாகும். புனித நதிகளில் நீராட முடியாதவர்கள் வீட்டிலேயே குளிக்கும் தண்ணீரில் கங்கை தீர்த்தத்தை கலந்து குளிக்கலாம்.

காலையில் சூரிய பகவானுக்கு தண்ணீர் படைத்து, "ஓம் சூர்யாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

சிவன் கோவிலுக்கு சென்று, தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

"ஓம் நம சிவாய" மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். அனுமன் சன்னதி அல்லது அனுமன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து அனுமன் சாலிசா சொல்வது சிறப்பானதாகும்.

முன்னோர்களை நினைத்து வழிபட்டு, எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும்.

அந்தணர்களை வைத்தும் தர்ப்பணம், சிராத்தம் கொடுத்து, அந்தணர்களுக்கு உணவு உள்ளிட்ட தானங்களை வழங்கலாம்.

முன்ஜென்ம பாவங்களை நீக்கி முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவசையான இன்று இவ்வாறு வழிபடுங்கள் | Mahalaya Amavasai Valipaadu

சனி அமாவாசை 2023 தானம் கொடுக்க வேண்டியவை

ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய் வைத்து அதில் முகத்தை பார்த்து விட்டு பிறகு அந்த எண்ணெய்யை யாருக்காவது தானமாக கொடுத்து விடலாம். இதனால் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உடல் ரீதியான பாதிப்புகள் உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

கருப்பு எள்ளை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த தண்ணீரை அரச மரத்திற்கு ஊற்றி விட வேண்டும். இது தற்போது வாழ்க்கையில் சந்தித்து வரும் அனைத்து கஷ்டங்கள், பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கொடுக்கும்.

 எண்ணெய், உளுந்து, போர்வை, இரும்பினால் ஆன பொருட்கள், விசிறி, ஆடைகள் போன்றவற்றை தானமாக கொடுப்பதால் சனி பகவானின் அருள் கிடைக்கும். இதனால் அவர்களின் அதிர்ஷ்டம் பல மடங்காக பெருகும். இதனால் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.