ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
நாடளுமன்றத்தின் முதலாவது குழு அறையில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு நாளையும் தொடரவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்துள்ளார்.
இந்த பயிற்சி நெறியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் ஆரம்பகட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கில், இந்த பயிற்சிநெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.