பொதுவாகவே கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் எதிர்கால வாழ்க்கையிலும் குறிப்பிட்டளவு ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
அதன் பிரகாரம் வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் கிரகங்களுள் சனி பகவான் பெயர்ச்சிக்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
கிரகங்களுள் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக சனி கிரகம் பார்க்கப்படுகின்றது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு நகர்கின்றார்.
அடுத்த வருடம் மார்ச் 2025 சனிபகவாக் கும்பம் ராசியிலிருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.
அதன்பிறகு 2025 மார்ச் 29-ம் தேதி மீன ராசியில் பிரவேசிக்கிறார். அதன் பின்னர் சனிபகவான் 2027 ஜூன் 3 ஆம் திகதி வரையில் அதே ராசியில் நிலைத்திருப்பார்.
குறித்த பெயர்ச்சியின் காரணமாக அடுத்த இரண்டு வருடங்களுக்கு செல்வ செழிப்புடன் ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குறித்த சனி பெயர்ச்சி அமோகமான மாற்றத்தை கொடுக்கப்போகின்றது.
இவர்கள் வாழ்க்கையில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பணத்துக்கும் ஏனைய செல்வங்களுக்கும் குறைவே இருக்காது.
சனியின் ஆசீர்வாதம் இருவர்களுக்கு முழுமையாக கிடைப்பதால் இவர்கள் எதிர்பார்த்ததை விடவும் சிறந்த வாழ்க்கையை வாழப்போகின்றார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனி மாற்றமானது பல்வேறு வகையிலும் சாதக மாற்றத்தை கொடுக்கப்போகின்றது.
குடும்பத்தில் உள்ளவர்களுடனான உறவு இவர்களுக்கு மிகப்பெரும் பலமாக அமையும். இவர்களுக்கு அடுத்த 2027 ஆம் ஆண்டு வரையில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
விருச்சிகம்
சனியின் இந்த இடப்பெயர்வு காலம் விருச்சிக ராசியினரின் வாழ்வில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தும்.
தொழில் ரீதியில் முன்னர் எப்போதும் இல்லாதது போல் அசுர வளர்ச்சி ஏற்படும். அதனால் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.