மாலை நேரத்தில் பூக்கள் மற்றும் இலைகளை பறிக்கக்கூடாது என்று கூறுவதற்காக காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாலை வேளையில் பூக்கள் மற்றும் இலைகள் ஓய்வெடுக்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் அவற்றைப் பறித்தால் பாவத்திற்கு சமம் ஆகும்.
மாலை வேலையில் தான் பறவைகள், பூச்சிகள் தங்களது கூட்டிற்குள் வரும். எனவே அந்த நேரத்தில் பூக்கள் மற்றும் இலைகளைப் பறிப்பது அவற்றை தொந்தரவு செய்வதற்கு சமம்.
மத நம்பிக்கைகளின் படி, மாலை நேரம் தான் தெய்வங்கள் மரங்கள் மற்றும் தாவரங்களில் வசிப்பதால், அத்தகைய சூழ்நிலையில் அவற்றை பறிப்பது அசுபமாக கருதப்படுகின்றது.
சூரிய அஸ்தனத்திற்கு பின்பு பூக்கள் இலைகளைப் பறித்தால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும். இதனால் நிதி சிக்கல் ஏற்படும்.
இந்த மதத்தில் காலையில் பூஜைக்காக பூக்கள் மற்றும் இலைகளை பறிப்பது மங்களகரமானதாக கருதப்படுகின்றது.
மாலைக்கு பின்பு தான் செடிகள் தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.